Saturday, March 3, 2018

சோழர்களுக்கும் பல்வர்களான வன்னிய காடவர்களுக்குமான திருமணத் தொடர்பு

வன்னிய குல க்ஷத்ரிய மன்னர்களான
===================================
காடவராயர்களிடம் சோழ மன்னர்கள் 
===================================
கொண்டிருந்த மிக மிக நெருங்கிய திருமணஉறவு
==============================================


கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சிசெய்த சோழ குல சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அவர்கள், பள்ளி குல காடவராய கோப்பெருஞ்சிங்கப் பல்லவனை தனது "மைத்துனர்" (மச்சான், Brother-in-law) என்று குறிப்பிடுகிறார்கள்.  எனவே அவர் வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனின் சகோதரியை திருமணம் செய்திருக்கிறார்கள் என்பது உண்மையாகிறது.

மேலும், சோழ பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் தனது மகளை, தனது "மச்சான்" சகல புவனச் சக்கரவர்த்திகள் காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனுக்கு தங்களது குல தெய்வக் கோயிலான "சிதம்பரம் நடராஜ பெருமான்" கோயிலில் வைத்து திருமண செய்து கொடுத்தார்கள்.  எனவே பள்ளி குல வேந்தன் காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவன் அவர்கள், சோழ குல சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு "மாப்பிள்ளை" (Son-in-law) ஆவார்கள்.

மேலும் சோழ குல சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகளுக்கும், பள்ளி குல காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனுக்கு பிறந்த மகளை, மூன்றாம் ராஜேந்திர சோழன் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். 

இந்த வன்னிய குல காடவராயர்களுடன் சோழர்கள் கொண்ட  திருமண தொடர்பு என்பது பிற்காலச் சோழ பேரரசை தோற்றுவித்த விஜயாலய சோழனின் மகனான ஆதித்த சோழனின் காலத்தில் இருந்தே இருந்துவந்திருக்கிறது.  பல்லவ அரசி "காடுவெட்டிகள் திருபுவனமாதேவி வயிரியக்கன்" என்ற வன்னிய குல க்ஷத்ரிய மங்கையை ஆதித்த சோழன் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள்.  இவர்களுக்கு பிறந்த மகனே "முதலாம் பராந்தக சோழன்" ஆவார்கள்.  மேலும் முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசிகள் "பல்லவ கம்பமாதேவி" மற்றும் "காடவ மாதேவி"  ஆகியோர் வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

எனவே இத்தகைய மிக மிக மிக நெருங்கிய திருமணமுறையை வைத்து பார்க்கும் போது வன்னியர்கள் தான் சோழர்கள் என்பது முற்றிலும் உண்மையாகிறது.  சோழ வேந்தன் மூன்றாம் ராஜராஜ சோழனை சிறைப்படுத்திய காடவராயன் கோப்பெருஞ்சிங்க பல்லவன் அவர்கள்,  அவனை "வன்னிய மணாளன்" என்று கல்வெட்டில் குறிப்பிடுகிறார்கள்.  அதாவது "வன்னிய மாப்பிள்ளை" என்று மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள். 

இந்த மூன்றாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகனாவான்.  ஆதாவது பள்ளி குல காடவராய கோப்பெருஞ்சிங்கனின் "மச்சான்" ஆவார்.  எனவே தான் அவர் கல்வெட்டில் "வன்னிய மணாளன்" (சோழ மாப்பிள்ளை) என்று குறிப்பிடுகிறார்கள்.  இதன் மூலம் "வன்னிய என்பது சோழன்" என்பது உறுதியாகிறது.  இந்த மிக மிக முக்கியமான சான்று என்பது, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதை 100% சதவீதம் உறுதிசெய்கிறது.   

மாமன் மச்சான் பட்டியல் 
========================





"மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மச்சான் (மைத்துனர்) , காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவன் ஆவார்கள்".

"மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மருமகன்,  காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவன் ஆவார்கள்".

"மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மகன் மூன்றாம் ராஜராஜ சோழன் அவர்கள், காடவராய கோப்பெருஞ்சிங்கனின் மாப்பிள்ளை   (மணாளன்) ஆவார்கள்".

"காடவராய கோப்பெருஞ் சிங்கனின் மகள் மீட்டாண்டார் நாச்சியார், மூன்றாம் ராஜேந்திர சோழனின் பட்டத்தரசி ஆவார்கள்.  அதாவது, மூன்றாம் ராஜேந்திர சோழனுக்கு காடவராயன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் மாமா (மாமனார்) ஆவார்கள்". 

இப்படி சான்றுகள் மிக மிக தெளிவாக "மாமன் மச்சான்" உறவு முறையை சொல்லும்போது, சிலர் தாங்கள் தான் சோழர்கள் என்று வீண் ஜம்பம் மற்றும் வேடிக்கைகளை செய்கிறார்கள்.  அத்தகையோர் அன்றைய காலகட்டத்தில் "சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனையின் நுழைவு வாயிலில் சென்று வருவதற்கே அனுமதி வாங்கியிருப்பார்கள்" என்பது குறிப்பிடதக்கதாகும்.  ஆனால் இன்று அவர்கள் வரலாறு பேசுவதை பார்த்தால் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.  எல்லாம் காலத்தின் கோலமாகும்.


சோழர்களின் உறவினர்களான வன்னிய காடவராயர்கள்

சோழர் கல்வெட்டுகளில் கோப்பெருஞ்சிங்கப்     ========================================= பல்லவனின் முன்னோர் பெயர்கள்  ================================


வன்னிய குல க்ஷத்ரிய காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனின் முன்னோர் பெயர்கள் சோழர் காலக் கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன :-

"காடுவெட்டிகள் திரிபுவனமாதேவி வயிரியக்கன்"
(Kaduvettigal Tribuvanamadevi Vayiriyakkan, Queen of Aditta Chola-I, 871 - 907 A.D)

"தந்தி சக்தி விடங்கியான லோக மாதேவியார்"
(Dandi Sakthi Vidangi (alias) Loka Madeviyar, Queen of Raja Raja Chola-I)

"காடவன் சக்தி விடங்கன்"
(Kadavan Sakthi Vidangan, 10th Century A.D)

"ராஜாதிராஜ பல்லவராயன்"
(Rajadhiraja Pallavarayan, Chieftain of Rajadhiraja Chola-I, 1018-1054 A.D)

"காடவன் மாதேவி"
(Kadavan Madevi, Queen of Kulottunga Chola-I, 1070-1120 A.D)

"அரையன் முனையன் மோகனனான ராஜேந்திர சோழ காடவராயன்"
(Araiyan Munaiyan Mogan (alias) Rajendra Chola Kadavarayan.  Chieftain during the period of Kulottunga Chola - I)

"சேனாபதி ஆதித்தன் திருச்சிற்றம்பலம் உடையானான காடவராயன்"
(Senapathi Adittan Thiruchittrambalam Udaiyanana Kadavarayan.  Chieftain during the period of Kulottunga Chola - I)

"வீரநாடான் வளந்தான் காடவராயர்"
(Viranadan Valanthan Kadavarayar.  Chieftain during Kulottunga Chola - I)

"ஆட்கொள்ளி காடவர் கோன்"
(Atkoli Kadavar Kon, Chieftain during Kulottunga Chola-II & Rajaraja Chola-II)

"செஞ்சியர் கோன் காடவன்"
(Senjiyar Kon Kadavan) 

"கூடல் ஆளப்பிறந்தான் மோகன் இராஜேந்திர சோழ பல்லவராதித்தன்"
(Kudal Aalappiranthan Mogan Rajendra Chola Pallavaradittan)
       
"கூடல் ஆளப்பிறந்தானான காடவராயர் மகனார் தொண்டை மண்டலங் கொண்ட பல்லவாண்டாரான காடவராயர்"
(Kudal Aalappirandaraana Kadavarayar Maganar Thondaimandalang Konda Pallavandaraana kadavaryar)

"பல்லவன் காடவன்"
(Pallavan Kadavan)

"பெருந்திக்கிலுஞ் சென்று போர் வென்ற பல்லவன் காடவர் கோன்"
(Perunthikkilunj Chendru Por Vendra Pallavan Kadavar Kon)

"கூராழி ஏந்திய பல்லவன்"
(Kurazhi Enthiya Pallavan)

"காடவன் பல்லவன்"
(Kadavan Pallavan)

"கடற்படைப் பல்லவன் காடவர்"
(Kadarpadai Pallavan Kadavar)

"பெண்ணை நாடுடையான் வடவேங்கட வெற்பன் தொண்டைத் திருநாடு தோள்வலியார் கொண்ட தொண்டை மன்னன்"
(Pennai Nadudaiyan Vadavenkata Verpan Thondaith Thirunadu Tholvaliyar Konda Thondai Mannan) 

"கடற்கச்சிப் பல்லவன்"
(Kadarkachi Pallavan)

"ஸ்ரீ கூடல் ஏழிசை மோகன் ஆளப்பிறந்தான்"
(Sri Kudal Ezhisai Mogan Aalappiranthan)

"அரசநாராயணன் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயன்"
(Arasanarayanan Aalappiranthan Viraseka Kadavarayan)

"நாலுதிக்கும் வென்றாரான ஏழிசைமோகன் காடவராயர்"
(Naludikkum Vendran (alias) Ezhisai Mogan Kadavarayar)

"அரசநாராயணன் கச்சியராயரான காடவராயர்"
(Arasanarayanan Kachiyarayarana Kadavarayar)

"கண்டராதித்தன் வாசலுக்கு மேற்கே புறப்பட்டுக் கற்கடகமாராயன் கூடலும் அதியமானாடும் அழித்து வெற்றிக்கொடி உயர்த்த அனுமனும் பொறித்தான் ஆளப்பிறந்தான் வீரசேகரனான காடவராயர்"
(Kandaradittan Vasalukku Merke Purappattu Karkadamarayan kudalum Adhiyamanadum Azhithu Vettrikodi Uyartha Anumanum Porithan Aalappiranthan Virasekaranana Kadavarayar)

"விடையளவிட்ட கொடி வீரசேகர காடவன்"
(Vidaiyalavitta Kodi Virasekara Kadavan)

"திரையன் மோகன் ஆளப்பிறந்தானான திருநீற்று தொண்டைமான்"
(Thiraiyan Mogan Aalappirandan (alias) Tirunetru Thondaiman)

"மோகன் ஆளப்பிறந்தானான அநபாயக் காடவராயன்"
(Mogan Aalappiranthan (alias) Anabaya Kadavarayan)

"கூடல் ஆளப்பிறந்தான் மோகனனான நாலுதிக்கும் வென்ற ராஜராஜ காடவராயன்"
(Kudal Aalappiranthan Mogan (alias) Naludikkum Vendra Rajaraja Kadavarayan)

"பள்ளி ஆளப்பிறந்தான் ஏழிசை மோகனனான குலோத்துங்கச் சோழ காடவராயன்"
(Palli Aalappiranthan Ezhisai Mogan (alias) Kulottunga Chola Kadavarayan)

"மோகன் ஆளப்பிறந்தான் அரசநாராயணனான காடவராயர்"
(Mogan Aalappiranthan Arasanarayananana Kadavarayar)

"அரசநாராயணன் ஏழிசை மோகனனான ஜனநாத கச்சியராயன்"
(Arasanarayanan Ezhisai Mogan (alias) Jananatha Kachiyarayan)

"உடையார் காடவராயர்"
(Udaiyar Kadavarayar)

"அரசநாராயணன் ஆளப்பிறந்தானான காடவராயன்"
(Arasanarayanan Aalappiranthanana Kadavarayan)










----- xx ----- xx ----- xx -----

Reference :-
=========

1.   South Indian Inscriptions, Volume-XII, Many inscriptions including Appendix-B inscriptions.

2.   தமிழ்நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம்.

3.   We are very glad to introduce the photograph of  descendant of Kadava Kopperujinga Pallava, the King of Mugasaparur (Near Virudhachalam) "Maha Raja Raja Sri Virasekara Ponnambala Baladandayutha Kachiyarayar".

நன்றி திரு.N.Murali Naicker

வன்னிய குல க்ஷத்ரிய சோழ அரசி லோகமாதேவி

முதலாம் ராஜேந்திர சோழனின் தாய்
==================================
தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்
========================================

முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி.1012 - 1044) கும்பகோணம் திருவலஞ்சுழி கல்வெட்டு ஒன்று அவருடைய தாயின் பெயரைப் பற்றி குறிப்பிடுகிறது :-

"ஸ்ரீ இராஜராஜதெவ நம்பிராட்டியார் தந்தி சக்திவிடங்கியாரான ஒலொகமஹாதெவியார்" (S.I.I, Vol-VIII, No.237).

முதலாம் ராஜேந்திர சோழனை ஈன்ற தாயானவள், "வானவன் மாதேவியான திரிபுவனமாதேவி" ஆவார்கள். மேற்குறிப்பிடப்பெற்ற கல்வெட்டினில் இருந்து தெரியவரும் "தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்" அவர்கள் மற்றொரு தாய் ஆவார்கள். இந்த "சக்தி விடங்கியே" முதலாம் ராஜ ராஜ சோழனின் தலைமை பட்டத்தரசியாக விளக்கியிருக்கிறார்கள்.

முதலாம் ராஜ ராஜ சோழனுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள், மூத்தவன் ராஜேந்திர சோழன் மற்றும் இரண்டு பெண்களான மாதேவடிகளும் குந்தவையும். திருவையாறு உலோக மாதேவீச்சுரத்திலுள்ள ஒரு கல்வெட்டு மாதேவடிகள் பற்றி குறிப்பிடுவதால், தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியாரின் மகள் தான் "மாதேவடிகள்" என்பது ஏற்புடையதாகும்.

"தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்" அவர்கள், வன்னிய குல க்ஷத்ரிய காடவர் (பல்லவர்) மரபினில் தோன்றிய அரசியாவார்கள் என்பதை நமக்கு கி.பி.10 நூற்றாண்டின் திருப்பதி கல்வெட்டு புலப்படுத்துகிறது :-

"சக்திவிடங்கநாயகி ஸ்ரீ காடபட்டிகள் தெவியார் பல்லவப் பெற்கடையார் மகள் சாமவையாகிய காடவன் பெருந்தெவியென் ஸ்ரீவெங்கடத்து எழுந்தருளிநின்ற பெருமானடிகளுக்கு" (S.I.I, Vol-IV, No.62).

காடவன் சக்தி விடங்கனின் தேவியும், பல்லவ பெற்கடையாரின் மகளுமான "சாமவையாகிய காடவன் பெருந்தேவி" அவர்கள், திருப்பதி பெருமாளுக்கு பிரம்மிக்கத்தக்க வகையில் பல கொடைகளை வழங்கியிருக்கிறார்கள் என்பது சான்றுகளில் இருந்து தெரியவருகிறது.

"காடவன் சக்தி விடங்கன்" என்று கி.பி. 10 ஆம் நூற்றாண்டு திருப்பதி கல்வெட்டினில் இருந்து தெரிய வருவதால், சோழப் பெருவேந்தன் முதலாம் ராஜ ராஜ சோழனின் தலைமை பட்டத்தரசியான "தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்" அவர்கள், காடவன் சக்தி விடங்கனின் குடும்பத்தைச் சேர்த்தவர்கள் என்பது தெளிவாக தெரியவருகிறது.

"தந்தி சக்தி விடங்கி" என்கின்ற பெயரினின் முன் இருக்கும் "தந்தி" என்ற சொல்லானது, இரண்டாம் நந்தி வர்ம பல்லவனுடைய மகன், தந்தி வர்ம பல்லவனின் (கி.பி. 796 - 846) பெயரோடு பொருந்திவருகின்றது.



இரண்டாம் நந்திவர்ம பல்லவன், "காடவ வம்சத்தை உய்விக்க பிறந்தவன்" (One who was born to raise the prestige of the Kadava family) என்று குறிப்பிடப்பெற்றார்கள் (S.I.I, Vol-XII, Introduction-VIII). எனவே "தந்தி" என்ற சொல்லானது காடவர் வம்சத்தோடு தொடர்புடையது என்பதாகும்.



விஜயாலய சோழனின் மருமகளும், முதலாம் ஆதித்த சோழனின் (கி.பி.871 - 907) ராணியுமான பல்லவ அரசி "காடுவெட்டிகள் திரிபுவனமாதேவி வயிரியக்கன்" அவர்கள், வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த அரசியாவார்கள். அதாவது காடவராய கோப்பெருஞ்சிங்க பல்லவனின் முன்னோர் ஆவார்கள்.


எனவே, சோழர்களுக்கும் பல்லவர்களுக்கும் திருமண உறவு இருந்திருப்பது என்பது தெளிவாக தெரியவருவதால், முதலாம் ராஜேந்திர சோழனின் தாயான "தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்" அவர்கள், வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த அரசியாவார்கள் என்பது முற்றிலும் உண்மையாகிறது.

"தந்தி சக்தி விடங்கியான லோகமாதேவியார்" அவர்களின் திருவுருவமும் மற்றும் அவரது கணவரின் திருவுருவமும், அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூர், கங்காசடேஸ்வரர் கோயிலில் கற்சிற்பங்களாக இருக்கின்றன.

நன்றி திரு.N. Murali Naicker